முதலாவது உக்கிராணக்காரன் என்றால் யார் ?
ஒரு எஜமானனின் சொத்துக்களையோ அல்லது பொருட்களையோ நிர்வகிப்பவன் மற்றும் பராமரிப்பவன். அவன் உரிமையாளன் அல்ல.
வேதத்திலே மத்தேயு 25: 14 - 30 வாசிப்போமானால்,
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் ஒரு உவமையை இயேசு கூறுகிறார்.
அந்த உவமையின் முடிவிலே சரியாய் தாலாந்துகளை பராமரித்த ஊழியக்காரரை எஜமான் பாராட்டி
"நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்" என்று கூறுகிறார்.
அதே சமயம் சரியாய் தாலாந்துகளை பராமரிக்காத ஊழியக்காரரை எஜமான் பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, என்று சொல்லி அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள் என்றார்.
இப்படியே தேவனும் நம் ஒவொருவருக்கும் சில தாலந்துகளை கொடுத்துள்ளார்....உதாரணமாக
1. பணம்
2. திறமை
3. கல்வி
4. ஞானம்
5. நேரம்
இப்படி பல தாலந்துகளை தேவன் நமக்கு கொடுத்துள்ளார். இவைகளெல்லாம் தேவனுடையவைகள் நம்முடையவைகள் அல்ல. நாம் இவைகளை பராமரிக்கும் உக்கிராணக்காரர் மட்டுமே. இவைகளை நாம் இவ்வுலக வாழ்வில் சுயநலத்திற்காக இல்லாமல், எப்படி ஞானமாக மற்றவர்களுக்கு நன்மையுண்டாகவும், தேவனுடைய ராஜ்யத்திற்காகவும் பயன்படுத்துகிறோம் என்று தேவன் கவனிக்கிறார் அப்படி நாம் வாழும் பொழுது, தேவன் நம்முடைய தாலந்துகளை ஆசிர்வதித்து பெருக பண்ணுகிறார். நாம் அப்படி செய்யவில்லை என்றால் தேவனிடத்தில் கடைசி நாட்களில் நாம் நம்முடைய தாலந்துகளை என்ன செய்தோம் என்று பதில் சொல்ல வேண்டும்.
சகோதர, சகோதிரிகளே சிந்தித்துப்பாருங்கள் ....