ஆராதனை என்பது தேவன்மேல் நமக்கு இருக்கும் அன்பையும் பயபக்தியையும் வெளிப்படுத்துவதே. இன்றைக்கு பல விதமான முறைகளில் நாம் ஆராதனை செய்கிறோம். சிலர் சபை ஆராதனைகளில் பங்கேற்கிறோம், சிலர் துதி ஆராதனை கூட்டங்களில் கலந்துகொள்கிறோம், இன்னும் சிலர் இசை கருவிகள் மீட்டி பாடல் பாடி ஆராதிக்கிறோம், மேலும் சிலர் அமைதியாக ஜெபவேளைளில் கர்த்தரை துதித்து ஆராதிக்கிறோம். அனாலும் இன்றைய இளைஞர் செய்ய வேண்டிய புத்தியுள்ள ஆராதனை என்ன தெரியுமா ?
வேதம் சொல்கிறது ....
ரோமர் 12 : 1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ஆம் நம் தேவன் தங்குகிற ஆலயமாகிய நம்முடைய சரீரங்களை பரிசுத்தமாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதுதான் புத்தியுள்ள ஆராதனை. இன்றைய நாட்களில் இது கடினமான ஒன்றுதான். இன்று இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களுடைய சரீரங்களை புகைக்கும், போதை மருந்துகளுக்கும், காமவிகாரங்களுக்கும், மதுவிற்கும், சரீரங்களை கெடுக்கும் பாக்கிற்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் வருத்தமான செய்தி. இதன் முடிவு பெலவீனமான வாழ்க்கையும், மரணமுமே. வாலிபனே, வாலிப பெண்னே விழித்துக்கொள். தேவனிடம் திரும்பு, நீ எந்த நிலையில் இருந்தாலும் குற்ற படாமல் தேவனை நோக்கி கூப்பிடு தேவன் கண்டிப்பாக இறங்குவார், விடுதலை தருவார். தினமும் வேதம் வாசியுங்கள், ஜெபியுங்கள் அப்போது தேவன் உங்களிடம் பேசுவார், நீங்கள் விடுதலை பெற சூழ்நிலைகளை ஏற்படுத்துவார்.
வேதம் சொல்கிறது ....
I கொரிந்தியர் 3 : 17
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
இசை மீட்டி பாடல் பாடி ஆராதிக்கிற நாம், புத்தியுள்ள ஆராதனையாகிய சரீரத்தையும் பரிசுத்தமாக காத்துக்கொள்வதிலும் நாம் முன்மாதிரியாய் இருப்போம்.தேவன் நமக்கு உதவுவார்.
உதவிக்கு சில வசனங்கள் ...
I கொரிந்தியர் 6 : 15, 19, 20
15. உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
20. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 1: 20
20. நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
ஆமென்