காலை வாக்குத்தத்தம். (Word for Morning)


ஒவ்வொரு நாளும் நாம் காலை கண் விழிக்கும் போது, நம் அனைவர்க்கும் அந்த நாளை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற பயம் வருவதுண்டு. ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் காலை கண் விழிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியது, இயேசு நமக்கு கொடுத்த அருமையான வாக்குத்தத்தம் "உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" என்பதையே. நாம் காலையில்  பள்ளி , கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை  வேறு  எங்கு சென்றாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான் "இயேசு நம்மோடு இருக்கிறார் ". ஆம் வானத்தையும், பூமியையும் படைத்த உன்னதமான கர்த்தர் நம்மோடு இருக்கிறார் . இனி ஒவ்வொரு நாளை சந்திப்பதற்கு பயம் எதற்கு ? இனி நாம் காலை கண் விழித்தவுடன் சொல்வோம். ஏசுவே நீர் என்னோடு இருப்பதற்காக நன்றி .

நினைவில் கொள்ள ...

மத்தேயு 28 : 20
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்


சங்கீதம் 118 : 24
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
Previous Post Next Post