அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நம்மில் அநேகர் இன்று, எப்படியோ இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். ஆமாம் இந்த வருடம் தான் எத்தனை போராட்டம் எத்தனை கஷ்டம் கொரோனா என்ற கொடிய பெரும் தொற்று வியாதி அதனால் ஏற்பட்ட விளைவுகள், அனேக நமக்கு அறிமுகமான மக்களின் மரணம், பணக் கஷ்டங்கள், வேலைவாய்ப்பு இல்லாமை, பல சோதனைகள், பல நாட்களில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை மற்றும் பயம் எவ்வளவு சோதனையான வருடம் இது. இந்த வருடத்தைப் போல போராட்டத்தை நான் இதற்கு முன்பு கண்டதில்லை யாரும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வு. ஆனாலும் இந்த வருடத்தின் கடைசி நாட்களை காண தேவன் நமக்கு உதவி செய்திருக்கிறார்.அவருக்கு நன்றி சொல்வோம்.
எப்படியோ 2020 முடிந்துவிட்டது புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். புதிய எண்ணங்கள், புதிய உற்சாகம், புதிய திட்டங்கள், புதிய தீர்மானங்கள் என நாம் சிந்தித்து கொண்டிருக்கிறோம். 2021 எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை ஆனாலும் நாம் பல்வேறு விதமான தீர்மானங்களை ஏற்கனவே எடுத்து விட்டோம். புத்தாண்டு என்றாலே புத்தாண்டு தீர்மானங்கள் (New Year Resolution) தான் நமக்கு ஞாபகத்தில் வருகிறது. இந்தப் புத்தாண்டு தீர்மானங்கள் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டுவர விரும்புகிறோம் இது ஒரு நல்ல விஷயம் தான். சிலர் தவறான பழக்கத்தை இந்த புதுவருடத்தில் விட்டுவிட நினைக்கிறோம் சிலர் நன்றாக இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் சிலர் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் இந்த வருடத்தில் என்று யோசிக்கிறோம் சிலர் இந்த வருடம் நான் கோபப்படவே மாட்டேன் எல்லோருடனும் அன்பாக இருப்பேன் என்று யோசிக்கிறோம் சிலர் நான் இந்த வருடத்தில் பொய் பேச மாட்டேன் இந்த வருடத்தில் நான் அநேகருக்கு உதவி செய்வேன் இந்த வருடத்திலேயே நான் என் உடல் எடையை குறைப்பேன் இப்படிப் பல தீர்மானங்களை நாம் எடுக்கிறோம் சிலர் அதை கடைபிடிக்கிறோம் சிலர் அதை கடைபிடிப்பதில்லை. எப்படி இருந்தாலும் பலரும் புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கிறோம். இந்த வருடம் நான் உங்களுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை பரிந்துரை செய்ய விரும்புகிறேன். நானும் அதையே என்னுடைய புத்தாண்டு தீர்மானமாக எடுத்திருக்கிறேன் அது என்னவென்றால் தேவனுடைய வார்த்தையோடு ( பைபிள்) அதிக நேரம் இந்த வருடத்தில் செலவிட வேண்டும் என்பதுதான் ஏனென்றால் வேதம் சொல்கிறது…..
யோசுவா1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
சங்கீதம்119:11
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
லூக்கா 11:28
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
II தீமோத்தேயு 3:16
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக
சங்கீதம் 119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
மத்தேயு 7:24
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மேல் குறிப்பிட்ட வசனங்களை நீங்கள் படித்து தியானித்தால் தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்வில் எவ்வளவு நன்மைகளையும் மாற்றங்களையும் கொண்டு வர முடியும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.அது மட்டும் அல்ல நாம் நினைக்கும் மற்ற மாற்றங்களையும் தேவன் நம் வாழ்வில் கொண்டுவர இந்தப் பழக்கம் அத்தியாவசியமானது.