நமது கிரியைகள் / செயல்கள் ......
1. நம்முடைய செயல்கள் / கிரியைகள் பார்த்து நம்முடைய பக்கத்து வீட்டார் நம்முடைய இயேசுவை குறித்து என்ன சொல்வர் ??
2. நம்முடைய செயல்கள் / கிரியைகள் பார்த்து நம்முடைய நண்பர்கள் நம்முடைய இயேசுவை குறித்து என்ன சொல்வர் ??
3. நம்முடைய செயல்கள் / கிரியைகள் பார்த்து நம்முடைய உடன் வேலை செய்பவர்கள் நம்முடைய இயேசுவை குறித்து என்ன சொல்வர் ??
சிந்திப்போம் செயல்படுவோம் .
ஜெபம் : பிதாவே உம்முடைய நாமம் மகிமைப்படும்படி எங்களுடைய கிரியைகள் இருக்க உதவி செய்யும் .
எனது வீட்டின் அருகில் ஒரு பெண் வசிக்கிறார். அவருக்கு ஒரு 45 அல்லது 50 வயது இருக்கலாம். அவர் எங்கள் தெருவில் மிகவும் பிரபலம். அவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் ஒரு கிறிஸ்துவர் . அவர் ஒரு வகையில் எனக்கு உறவினர் கூட. அவர் மிகவும் பக்தியாக இருப்பார். குறிப்பாக ஞா ய் ற்று கிழமை அவரை பார்க்கவே முடியாது . பல சபைகளுக்கு செல்வார் . ஞா ய் ற்று கிழமைகளில் அவரும் அவருடைய கணவரும் 7 அல்லது 8 மணிக்கே வீடு திரும்புவர் . அவரை பற்றி இன்னொரு விஷயம் , யாரிடமும் எந்த இடத்திலும் இயேசுவை குறித்து தைரியமாக சொல்வார். சில தடவைகள் அவர் பேசுவது கண்டு ஆச்சரியப்பட்டு இருகிறேன்.
அனால் அவருடைய செயல்கள் எதிர் மாறானவை. அடிக்கடி பலரிடம் சண்டை போடுவார் , தெருவில் யாரையாவது திட்டி கொண்டு இருப்பார் அல்லது யார் மேல்லாவது சாபம் போடுவார் . இப்படி அவர் செய்வது மிகவும் வருத்தமான ஒன்று . அவரை பற்றி பலர் தவறாக பேசும் போது ஏசுவையும் தவறாக பேசுவர். இதை நானும் சில தடவை கேட்டு இருகிறேன் . மிகவும் வருத்தமான விஷயம். நம்முடைய செயல்கள் நம்முடைய பிதாவுக்கு கெட்ட பேர் உண்டாகுகிறது . நாம் சிந்திப்போம் ..........நம்மீல் எத்தனை பேர் இப்படி இருக்கிறோம் ??
நாம் எவ்வளவு தான் இயேசுவை குறித்து பேசினாலும் மற்றவர்கள் நம்முடைய செயல்களை தான் உற்று கவனிகின்றனர். ஆங்கிலத்தில் இப்படி சொல்வர் " Actions are louder than words".. அதனால் நாம் நம்முடைய வார்த்தைகளை விட செயல்களில் அதிக கவனம் செலுத்துவோம் .
நாம் எவ்வளவு தான் இயேசுவை குறித்து பேசினாலும் மற்றவர்கள் நம்முடைய செயல்களை தான் உற்று கவனிகின்றனர். ஆங்கிலத்தில் இப்படி சொல்வர் " Actions are louder than words".. அதனால் நாம் நம்முடைய வார்த்தைகளை விட செயல்களில் அதிக கவனம் செலுத்துவோம் .
பைபிள் சொல்கிறது .....
மத்தேயு 5 : 16
- இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
1. நம்முடைய செயல்கள் / கிரியைகள் பார்த்து நம்முடைய பக்கத்து வீட்டார் நம்முடைய இயேசுவை குறித்து என்ன சொல்வர் ??
2. நம்முடைய செயல்கள் / கிரியைகள் பார்த்து நம்முடைய நண்பர்கள் நம்முடைய இயேசுவை குறித்து என்ன சொல்வர் ??
3. நம்முடைய செயல்கள் / கிரியைகள் பார்த்து நம்முடைய உடன் வேலை செய்பவர்கள் நம்முடைய இயேசுவை குறித்து என்ன சொல்வர் ??
சிந்திப்போம் செயல்படுவோம் .
ஜெபம் : பிதாவே உம்முடைய நாமம் மகிமைப்படும்படி எங்களுடைய கிரியைகள் இருக்க உதவி செய்யும் .