படித்த பயனுள்ள புத்தகம் 1 : ஹெவென் இஸ் பார் ரியல் ( Heaven is for Real )
நண்பர்களே , இந்த வாரம் ஹெவென் இஸ் பார் ரியல் ( Heaven is for Real ) என்ற ஆங்கில புத்தகத்தை படித்தேன். மிகவும் அற்புதமான புத்தகம். அதனால் அந்த புத்தகத்தை குறித்த எனது கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
இந்த புத்தகம் அமெரிக்காவில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்று . 2012 ஆண்டு வரை இந்த புத்தகம் ஒரு மில்லியன் காப்பிகள் விற்று சாதனை படைத்துள்ளது .
நண்பர்களே , இந்த வாரம் ஹெவென் இஸ் பார் ரியல் ( Heaven is for Real ) என்ற ஆங்கில புத்தகத்தை படித்தேன். மிகவும் அற்புதமான புத்தகம். அதனால் அந்த புத்தகத்தை குறித்த எனது கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
இந்த புத்தகம் அமெரிக்காவில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்று . 2012 ஆண்டு வரை இந்த புத்தகம் ஒரு மில்லியன் காப்பிகள் விற்று சாதனை படைத்துள்ளது .
இந்த புத்தகம் கோல்டன் என்கிற 4 வயது சிறுவனின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம் . அதை மிக சுவாரிசியமாக அவனது தந்தை டோட் பர்போ (Todd Burpo) எழுதியுள்ளார் . டோட் பர்போ அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய சபையில் போதகராக இருக்கிறார் .
இந்த புத்தகத்தில் உள்ளவகைகளை சில வரிகளில் சொல்ல முயற்ச்சி செய்கிறேன் .... கோல்டன் என்கிற 4 வயது சிறுவன் கடுமையான வய்ற்று சம்பந்தமான நோய் பாதிக்கபட்டு ஆபரேஷன் செயப்பட மருத்துவமனையில் அனுமதிகபடுகிறான் . அவன் மிக மோசமான நிலமையில் இருபதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள் . மனமுடைந்த அவனது தாயும் தந்தையும் இயேசுவை நோக்கி ஜெபம் செய்கிறார்கள். ஜெபம் கேட்கபடுகிறது கோல்டன் குணமடைகிறான் வீடு வந்து சேர்கிறார்கள்.
இதற்குப் பிறகு சில நாட்களில் கோல்டன் சில விசயங்களை பேச அரம்பிக்கிறான் அதை கேட்டு பெற்றோர் ஆச்சரிபடுகின்றனர் . அவன் ஆபரேஷன் நடை பெற்ற நேரத்தில் இயேசுவோடு பரலோகத்தில் இருந்ததாக கூறுகிறான் . அது மட்டும் அல்ல அங்கே யோவான் ஸ்நானகன் , காப்ரியேல் தூதன் மற்றும் சாத்தானையும் கண்டதாக கூறுகிறான். அவனது பெற்றோர் அதை நம்ப முடியாமல் இருக்கும்போது , கோல்டன் பிறபதற்கு முன்பு தனது தாய் வயிற்றிலேயே இறந்த குழந்தையை பரலோகத்தில் கண்டதாக கூறுகிறான் . இந்த குழந்தை இறந்த விஷயம் கோல்டனுக்கு அதற்கு முன் தெரியாது . பெற்றோர் நம்ப அரம்பிகின்றனர். இன்னும் அநேக பரலோக விசயங்களை கோல்டன் பெற்றோருக்கு சொல்கிறான் அதையே இந்த புத்தகத்தில் அவனது தந்தை டோட் பர்போ எழுதியுள்ளார்.
மிக அற்புதமான புத்தகம். கிடைத்தால் வாங்கி படியுங்கள் . இந்த புத்தகத்தை படிக்கும் போது மிண்டும் ஒரு முறை நமக்கு இயேசு உயிரோடு இருக்கிறார் , அவர் மிண்டும் வருவார் , நமக்காக ஸ்தலத்தை ஆயத்த படுத்தி கொண்டிருக்கிறார் என்பது நமது மனதில் வந்து போகும் .
ஆன்லைனில் புத்தகம் வாங்க
இந்த புத்தகம் சினிமாவாகவும் இந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது
தகவலுக்கு IMDB
சிறு தகவல் : வயிற்றிலேயே இறந்த குழந்தைகள் பரலோகத்தில் இருந்ததாக மறைந்த சகோதரர் டி ஜி எஸ் தினகரன் அவர்கள் தாம் எழுதிய என் பரலோக தரிசனங்கள் புத்தகத்திலும் குறிபிட்டு இருதார் .