இயேசுவின் உயிர்தெழுதலில் , நமக்குள்ள தொடர்பு .....



இயேசு சிலுவையில் மரித்து முன்றாம் நாள் உயிர்ரோடு எழுந்தார் என்று விசுவாசிக்கிற (நம்புகிற) யாவரும் ரட்சிக்க படுவார்கள் என்று ரோமர் 10:10 கூறுகிறது.

அனாலும்  ஈஸ்டருக்கும் நமக்குள்ள தொடர்பு என்ன ? இதிலே நாம் எங்கே இருக்கிறோம் என்று அறிந்துகொள்ள ........படியுங்கள் ரோமர் 6..

 விசுவாசிக்கிற நாம் (நம்முடைய பாவ சரிரம் ) அனைவரும் அவரோடு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம்பண்ணப்பட்டோம்.
4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
6. நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

நாம் அவரோடு கூட புதிய மனிதனாய் உயிர்ரோடு எழுந்துமிருக்கிறோம்
8. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

நாம் இனி செய்ய வேண்டியது என்ன .....
11. அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12. ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
13. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

அமென். இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள் !


Post a Comment

Previous Post Next Post