முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டிய சூழ்நிலைகள் நம் ஒவொருவர் வாழ்விலும் வரும். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறோம். உதாரணமாக ....
- + 2 முடித்துவிட்டேன் அடுத்து என்ன செய்வது ?
- வேலை போய் விட்டது என்ன செய்வது ?
- விவாகரத்து செய்துவிடலாமா ?
- தொழில் தொடங்கலாமா?
- இந்த இடத்தில வீடு வாங்கலாமா ?
- இவரை திருமணம் செய்யலாமா ?
- அடுத்து என்ன படிப்பது ?
இப்படி பல முடிவு எடுக்க வேண்டிய தருணங்களில் பொதுவாக நாம் நம்முடைய விருப்பங்களை வைத்து முடிவுகளை எடுக்கிறோம்.
இந்த
முடிவுகள் நம்முடைய எதிர்கால வாழ்க்கையையும், ஆவிக்குரிய வாழ்க்கையையும்
எப்படி பாதிக்கும் என்று நாம் அறிவதில்லை. சங்கடங்கள் நேரும்போது தான் நாம்
தவறான பாதையில் இருப்பதை அறிந்துகொள்கிறோம்.இந்த சொந்த முடிவுகள் நம்மை தேவனுடைய திட்டத்தை விட்டு வெகு தூரம் கொண்டு சென்றுவிடும்.இதன் பலன் தோல்வியான வாழ்கை.
சிலர் தாங்களாகவே முடிவு எடுக்க முடியாமல் மற்ற மனிதர்களை நாடி
செல்கின்றனர் . தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை தேவன் மாத்திரமே
அறிவார்.நாம் அவருக்கு காத்திருக்கும் போது அதை அவரே நமக்கு வெளிப்படுத்துவார். வேதம் சொல்கிறது...
சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
நீதிமொழிகள் 13:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
அவருடைய பெயரே " ஆலோசனை கர்த்தா"
ஏசாயா 9:6
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
இப்படி பட்ட தேவன் நமக்கு இருக்கும் போது, எல்லா நேரங்களிலும் ஆலோசனைக்காக
அவரையே நாடுவோம், அப்போது அவர் நமக்கு ஆலோசனை தந்து சமாதானத்தின் வழியிலே
நம்மை நடத்துவார்.
தாவீது சொல்வதை பாருங்கள்...
சங்கீதம் 16:7
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்;
தினமும் வேதம் வாசித்து அவரோடு நேரம் செலவிடுங்கள் அப்போது அவர் உங்களோடும் இடைப்படுவார். உங்களுக்கும் ஆலோசனை தருவார். ஆமென்