மன்னிப்பு, இன்றைய நவீன உலகில் நம்மில் பலரும் மறந்து விட்ட சொல்லாகிவிட்டது. இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே சண்டைகளும், வாக்குவாதங்களும், பிரிவுகளும் பெருகிகொன்டே போகிறது. யாரும் யாரையும் மன்னிக்க தயாராக இல்லை . குடும்பங்களுக்கிடையே கூட இந்த மன்னிப்பு தரப்படுவதில்லை.பதிலுக்கு பதில், பழிக்கு பழி செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். அதுவே இன்றைய உலகின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது.ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு, பகைவனையும் மன்னிப்பது போன்ற கிறிஸ்துவின் போதனைகள் எல்லாம் பழமொழிகளாகிவிட்டது.
நாம் சற்று சிந்தித்து பார்ப்போம்...மன்னிப்பது கிறிஸ்துவின் முக்கியமான போதனை மட்டுமல்ல செய்கையும் கூட. அவர் சிலுவையில் தொங்கும் போது கூட "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்றே சொன்னார். இப்படிப்பட்ட இயேசுவை பின்பற்றுகிற நாம் மற்றவர்களை மன்னிக்க மறுப்பது ஏன் ?
நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டிய அவசியம் என்ன ? வேதம் கூறும் முக்கிய காரணங்கள் .....
முதலாவது, நம்முடைய பாவங்களை பிதா நமக்கு மன்னிக்க நாம் மற்றவர்களை மன்னிப்பது அவசியமானது. வேதம் சொல்கிறது
( மத்தேயு 6:14,15 )
நாம் சற்று சிந்தித்து பார்ப்போம்...மன்னிப்பது கிறிஸ்துவின் முக்கியமான போதனை மட்டுமல்ல செய்கையும் கூட. அவர் சிலுவையில் தொங்கும் போது கூட "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்றே சொன்னார். இப்படிப்பட்ட இயேசுவை பின்பற்றுகிற நாம் மற்றவர்களை மன்னிக்க மறுப்பது ஏன் ?
நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டிய அவசியம் என்ன ? வேதம் கூறும் முக்கிய காரணங்கள் .....
முதலாவது, நம்முடைய பாவங்களை பிதா நமக்கு மன்னிக்க நாம் மற்றவர்களை மன்னிப்பது அவசியமானது. வேதம் சொல்கிறது
( மத்தேயு 6:14,15 )
- 14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
- 15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
பரலோக ராஜ்யம் செல்ல நம்முடைய பாவங்கள் மன்னிக்க பட வேண்டியது எவ்வளவு முக்கிமானது. அதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்று இந்த வசனங்கள் தெளிவாக கூறுகிறது அல்லவா.ஆதலால் நாம் பாவ அறிக்கை ஜெபம் செய்யும் முன்பாக யாரிடமாவது நாம் விரோதம் கொண்டிருந்தால் அதை அவர்களுக்கு மன்னிப்பது அவசியமானது.
- 25. நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மற்றவர்களின் தவறுகளை நாம் மன்னியாவிட்டால் நம்முடைய ஜெபம் கேட்படுவதெப்படி ?நம்முடைய ஜெபம் கேட்கப்பட நாம் மற்றவர்களை மன்னிப்பது அவசியமாய் இருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரனாகிய ஸ்தேவான் தான் கல்லெறிந்து கொல்லப்படும் போது சொல்லிய வார்த்தைகளை கவனியுங்கள் ...
அப்போஸ்தலர் 7:60
- 60. அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
ஆமென்
Tags
மன்னிப்பு