நம்முடைய வாழ்கையில் பல கடினமான சூழ்நிலைகள் மற்றும் போராட்டங்களை கடந்து செல்கிறோம். பல நேரங்களில் சோர்ந்து போகிறோம். சில சூழ்நிலைகள் நாம் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மிக பெரிதாக இருக்கிறது. எப்படி இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்வது என்று தவிக்கிறோம் . ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் தேவன் நம்முடைய எல்லா கடினமான சூழ்நிலைகளை விட பெரியவர். எல்லா கடினமான சூழ்நிலைகளையும் மாற்ற வல்லவர். ஆனால், தேவன் நம்முடைய சூழ்நிலைகளை சரி செய்ய நாம் ஒத்துழைக்க வேண்டும் . எப்படி ஒத்துழைப்பது ??
வேதத்தில், தேவன் பல பெரிய காரியங்களை விசுவாச வீரர்களின் வாழ்கையில் செய்தார். அதற்காக அவர்கள் என்ன செய்தனர் ?? சில உதாரணங்களை பார்போம் .....
முதலாவது நம் அனைவர்க்கும் தெரிந்த மோசே சந்தித்த கடினமான சூழ்நிலை அப்போது அவர் செய்தது என்ன .....இந்த வசனங்களை படிப்போம் ...
யாத்திராகமம் 14
- 10.பார்வோன் சமீபித்து வருகிற போது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
11. அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?
12. நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.
யாத்திராகமம் 14
- 13.அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
மேலும் சில உதாரணங்கள் ......
I சாமுவேல் 17
- 37. பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்;
மேலும்
- 45. அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
46. இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.
47. கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம்கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
தாவிதின் வார்த்தைகளை கவனியுங்கள் ....மிக பெரிய கோலியாத்தை சந்திக்கிறான் ஆனால் அவனுடைய வார்த்தைகளில் பயம் இல்லை விசுவாசமே தெரிகிறது ....நாம் இதை கற்று கொள்ள வேண்டும் . கடினமான சூழ்நிலைகளில் விசுவாச வார்த்தைகளை பேசுவோம் வெற்றியை பெற்றுகொள்வோம் .
கடைசியாக ....
தானியேல் 3
- 17.நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;
......கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது வாக்குத்தத்தங்களை பற்றிக்கொண்டு பயப்படாமல் விசுவாச வார்த்தைகளை பேசுங்கள் தேவன் பெரிய காரியங்கள் செய்வார். ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தைகளுக்கு உண்மையாய் இருக்கிறார் . யுத்தம் கர்த்தருடையது. நீங்கள் சும்மாயிருப்பீர்கள் !