பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் 

யாக்கோபு 4 : 7


    பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்

வேதம் சொல்கிறது பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று , ஆனால் பல நேரங்களில் நாம் நம்மையும் அறியாமல் பிசாசுக்கு இடம் கொடுக்கிறோம். அதை அவன் பயன் படுத்தி நம்முடைய வாழ்வை சிக்கல் ஆக்குகிறான் . 

முதலில் நாம் எப்படி பிசாசுக்கு இடம் கொடுக்கிறோம் என்பதை பார்போம் .....

பிசாசு நம் முன்னால் வந்து நிற்கபோவதில்லை , ஆனால் அவனுடைய ஆயுதங்களான பயம் , குற்ற உணர்ச்சி , பொய் , சோர்வு , திருடுவது , பகை, பொறாமை,  கொல்வது , அழிப்பது , உலகத்தின் காரியங்களுக்கு அடிமை ஆக்குவது போன்ற காரியங்களை நமக்குள்ளே திணிக்க முயற்சிப்பான். இவைகளை நாம் செய்யும்போது பிசாசு நமக்குள் வந்துவிடுகிறான் .

உதாரணமாக :
எனக்கு பயமாக இருக்கிறது என்னுடைய எதிர்காலம் கேள்விகுறி ஆகிவிட்டது  என்று சொல்லும் போது  பயத்தைஅறிக்கை செய்து பிசாசுக்கு இடம் கொடுக்கிறோம்.

இப்படி நாம் செய்யகூடாது .......

மாறாக 

ரோமர் 8:28 படி எனக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று சொன்னால் ( அறிக்கை ) செய்தால் நாம் தேவனுக்கு இடம்கொடுகிறோம்.

ஆதனால் நாம் யாருக்கு இடம் கொடுக்கிறோம் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். பிசாசுடைய காரியங்கள் வரும்போது தேவனுடைய வார்த்தைகளை அறிக்கை செய்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். பிசாசிடம், நமக்கு தேவன் இயேசுவின் மூலம் கொடுத்த அதிகாரங்களை பயன்படுத்தும் போது அவன் ஓடிப்போவான்.

Post a Comment

Previous Post Next Post