தேவனுடைய வழி
நம்முடைய வாழ்வில் எல்லாம் வெற்றியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் . நம்முடைய வேலை , தொழில் மற்றும் குடும்பம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று ஆசை படுகிறோம் . ஆனால் பல நேரங்களில் நம்முடைய வாழ்கை நாம் நினைபது போன்று அமைவதில்லை. இதற்கான காரணம் நாம் தேவனுடைய வழியை விட்டு நம் சொந்த வழியில் செல்வது தான்.
தேவன் சொல்கிறார்
ஏசாயா 55:8
ஆம் நம்முடைய வழி அவருடைய வழி அல்ல. தேவனுடைய வழியை கண்டுபிடிப்பது எப்படி ? நாம் தேவனுடைய வழியில் நடப்பது எப்படி ?
அவருடைய வார்த்தையின் படி நடப்பது அவருடைய வழியில் நடப்பது ஆகும் .
வேதம் சொல்கிறது ....
சங்கீதம் 128 : 1
எவ்வளவு உண்மை . தேவன் தம்முடைய வழியில் நாம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு நாம் எப்படி செவி கொடுக்க முடியும் ? அவருடைய வசனத்தின் படி நாம் நடக்கும் போது அவருக்கு நாம் செவிகொடுகிறோம் . நாமும் தாவிது போல அவரிடம் கேட்போமா ?
சங்கீதம் 25 :4
இஸ்ரவேல் மக்கள் தம்முடைய வழியில் நடக்காத போது தேவன் எப்படி கோபம் கொள்கிறார் என்று பாருங்கள் .......
ஆனால் அவருடைய வழியில் நாம் நடக்கும் போது அவர் நமக்கு தரும் ஆசிர்வதங்களை பாருங்கள் .....
நாம் தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றி அவர் வழி நடந்து ஆசிர்வதங்களை பெற்றுகொள்வோம்.
நம்முடைய வாழ்வில் எல்லாம் வெற்றியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் . நம்முடைய வேலை , தொழில் மற்றும் குடும்பம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று ஆசை படுகிறோம் . ஆனால் பல நேரங்களில் நம்முடைய வாழ்கை நாம் நினைபது போன்று அமைவதில்லை. இதற்கான காரணம் நாம் தேவனுடைய வழியை விட்டு நம் சொந்த வழியில் செல்வது தான்.
தேவன் சொல்கிறார்
ஏசாயா 55:8
- உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் நம்முடைய வழி அவருடைய வழி அல்ல. தேவனுடைய வழியை கண்டுபிடிப்பது எப்படி ? நாம் தேவனுடைய வழியில் நடப்பது எப்படி ?
அவருடைய வார்த்தையின் படி நடப்பது அவருடைய வழியில் நடப்பது ஆகும் .
வேதம் சொல்கிறது ....
சங்கீதம் 128 : 1
- கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
- என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
எவ்வளவு உண்மை . தேவன் தம்முடைய வழியில் நாம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு நாம் எப்படி செவி கொடுக்க முடியும் ? அவருடைய வசனத்தின் படி நாம் நடக்கும் போது அவருக்கு நாம் செவிகொடுகிறோம் . நாமும் தாவிது போல அவரிடம் கேட்போமா ?
சங்கீதம் 25 :4
- கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
இஸ்ரவேல் மக்கள் தம்முடைய வழியில் நடக்காத போது தேவன் எப்படி கோபம் கொள்கிறார் என்று பாருங்கள் .......
சங்கீதம் 95 : 10,11
- 10.அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
ஆனால் அவருடைய வழியில் நாம் நடக்கும் போது அவர் நமக்கு தரும் ஆசிர்வதங்களை பாருங்கள் .....
சங்கீதம் 37 : 34
- நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;
நாம் தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றி அவர் வழி நடந்து ஆசிர்வதங்களை பெற்றுகொள்வோம்.
Tags
வழி