தேவனுடைய வழி

தேவனுடைய வழி 

நம்முடைய வாழ்வில் எல்லாம் வெற்றியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் . நம்முடைய வேலை , தொழில் மற்றும் குடும்பம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று ஆசை படுகிறோம் . ஆனால் பல நேரங்களில் நம்முடைய வாழ்கை நாம் நினைபது  போன்று அமைவதில்லை. இதற்கான காரணம் நாம் தேவனுடைய வழியை விட்டு நம் சொந்த வழியில் செல்வது தான்.

தேவன் சொல்கிறார்

ஏசாயா 55:8
      உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆம் நம்முடைய வழி அவருடைய வழி அல்ல. தேவனுடைய வழியை கண்டுபிடிப்பது எப்படி ?  நாம் தேவனுடைய வழியில் நடப்பது எப்படி ?

அவருடைய வார்த்தையின் படி நடப்பது அவருடைய வழியில் நடப்பது ஆகும் .

வேதம்  சொல்கிறது ....

சங்கீதம் 128 : 1
      கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 81 : 13

      என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்      வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!

எவ்வளவு உண்மை . தேவன்  தம்முடைய வழியில் நாம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு நாம் எப்படி செவி கொடுக்க முடியும் ? அவருடைய வசனத்தின் படி நாம் நடக்கும் போது அவருக்கு நாம் செவிகொடுகிறோம் . நாமும் தாவிது  போல அவரிடம் கேட்போமா ?

சங்கீதம் 25 :4
    கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

இஸ்ரவேல் மக்கள் தம்முடைய வழியில் நடக்காத போது  தேவன் எப்படி கோபம் கொள்கிறார் என்று பாருங்கள் .......

சங்கீதம் 95 : 10,11
    10.அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

    11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

ஆனால் அவருடைய வழியில் நாம் நடக்கும் போது அவர் நமக்கு தரும் ஆசிர்வதங்களை பாருங்கள் .....

சங்கீதம் 37 : 34
    நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;

நாம் தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றி அவர் வழி நடந்து ஆசிர்வதங்களை பெற்றுகொள்வோம். 

Post a Comment

Previous Post Next Post