இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் வல்லமையானது, எல்லா நாமத்திற்கும் மேலானது என்பதை நாம் அறிவோம். ஆனால் இயேசுவின் நாமம் ஒவ்வொரு விசுவாசிக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் அன்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



1. முதலாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். வானம் , பூமி மற்றும் பூமியின் கிழ உள்ளோர் அனைவரும் இயேசுவின் நாமத்திற்கு கிழபடிவர். இந்த முன்று இடத்திலும் அறியப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ( கிழே உள்ள வசனத்தை கவனியுங்கள் )

பிலிப்பியர் 2: 10,11
    10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

    11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், ல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

2. அடுத்தது இந்த உலகத்திலே நாம் இரட்சிக்கப்படும்படி நமக்கு கொடுக்கபட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமம். நாம் தேவனிடம் சேர இயேசுவை தவிர வேறு வழியில்லை. அதை இந்த வசனத்தின் முலம் நாம் அறிந்து கொள்ளலாம் .......


அப்போஸ்தலர் 4: 12
    12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.


3. இயேசுவின் நாமத்தினாலே நாம் கூடி வரும்போது இயேசு அங்கே இருக்கிறார் . இதை நாம் அறிந்து கொண்டு விசுவாசிக்க வேண்டும் . அதை விட்டு நாம் இயேசுவை இறங்கும் இயேசுவே , இப்போது இங்கே வாரும் இயேசுவே என்று நாம் ஜெபிக்க  தேவை இல்லை. இயேசு தாம்  சொன்னப்படி அவருடைய நாமத்தினால் நாம் கூடி வரும்போது அங்கே இருப்பார் . இயேசு பொய் சொல்பவர் அல்ல .இந்த வசனத்தை பாருங்கள் ......


மத்தேயு 18 : 20


    20. ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது ன் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

4. இயேசுவின் நாமம் நமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் . ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுக்கப்பட்ட அதிகாரம் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய நாமம் இரட்சிக்கப்பட்ட அனைவருடைய உரிமை.அவருடைய நாமத்தினாலே நாம் வியாதியஸ்தர்களை குணமாக்க முடியும், அற்புத அடையாளங்களை செய்ய முடியும் .

மாற்கு 16 : 17, 18


    17.என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

    18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
இதற்கு சாட்சியாக 

லூக்கா 10 : 17


    17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
பிசாசுக்கு விசுவாசிகள் பயப்பட தேவை இல்லை நம்மிடம் இயேசுவின் நாமம் உள்ளது அல்லேலுயா !


5. தேவனிடம் நாம் எதாகிலும் கேட்கும் போது அதை இயேசுவின் நாமத்தில் கேட்க வேண்டும். அப்போது நாம் அதை பெற்றுகொள்வோம். கண்டிப்பாக நாம் பெற்று கொள்வோம் என்னென்றால் வசனம் அப்படித்தான் சொல்கிறது . வசனத்தை நாம் விசுவாசிக்க வேண்டும்.


    யோவான் 16:24
    24. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.

6. கடைசியாக நாம் எதை செய்தாலும் அதை இயேசுவின் நாமத்தினால் செய்ய வேண்டும். 
    கொலோசெயர் 3:17
    17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
இயேசுவின் நாமம் நமக்கு மிக முக்கியமானது. தேவன் நமக்கு கொடுத்த அதிகாரம் மற்றும் உரிமை. அதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்து அனுதின வாழ்வில் பயன்படுத்த வேண்டும் .








































































































Post a Comment

Previous Post Next Post