இந்த வசனத்தை கவனியுங்கள் ........
ஏசாயா 31 : 1
- 1. சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
இங்கே இஸ்ரவேல் மக்கள் அசீரியர்க்கு பயந்து, கர்த்தரை தேடாமல் எகிப்தியரை நம்பி அவர்களிடம் உதவி கேட்கின்றனர் ஏனென்றால் அவர்கள் பெலசாலிகள் மற்றும் அவர்களிடம் இரதங்கள் நிறைய உள்ளன. அவர்கள் வந்து உதவி செய்வார்கள் என்று எண்ணினர். ஆனால் அவர்கள் வரவில்லை. கடைசியாக வேறு வழி இல்லாமல் தேவனிடம் முறை இடுகின்றனர் . ஏசாயா 36ஆம் அதிகாரம் முதல் 37 ஆம் அதிகாரம் முடிய படித்தால்.... தேவன் தமக்காகவும் தன்னுடைய தாசன் தாவிதுக்காகவும் அவர்களை காப்பாற்றுகிறார் என்பதை அறியலாம்.
நாமும் இப்படித்தான் பல நேரங்களில் தேவனை நம்புவதை விட்டு நம்முடைய சுய அறிவையும் , மற்ற மனிதரையும் நம்பி கடைசியில் தோல்வி அடைந்து வேறு வழி இல்லாமல் தேவனிடம் வருகிறோம். அப்படி செய்வதை தேவன் விரும்புவது இல்லை. முதலாவது நாம் தேவனை தேட வேண்டும் ...அவர் சொல்லிருக்கிறார் ..
சங்கீதம் 50:15
- 15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
நாம் இதை நினைவில் கொள்வோமா . இனி நம்முடைய கஷ்டமான நேரங்களில் முதலில் தேவனை அழைப்போம் .
Tags
நம்பிக்கை