பயப்படாதே ! பயப்படாதிருங்கள் !

பயப்படாதே , பயப்படாதிருங்கள் ...இந்த வார்த்தைகளை வேதத்தில் எத்தனை முறை நாம் வாசித்திருப்போம். ஆனாலும் பல நேரங்களில் நாம் பயந்து , அந்த பயத்தினால் சில காரியங்களை செய்து  விடுகிறோம். அந்த காரியங்கள் நம்மை தேவனுடைய சித்தத்தை விட்டு வெளியே கொண்டு செல்லும். அதனால்  தேவன் நாம் பயப்பட வேண்டாம் என்று வேதத்தில் பல முறை சொல்கிறார் .  பயம் தேவனிடம் இருந்து வருவதில்லை , அது பிசாசிடம் இருந்து வருவது .




வேதம் சொல்கிறது .....

II தீமோத்தேயு 1 : 7
    7. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
இந்த வார்த்தையின்படி தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடுக்கவில்லை என்பதை நாம் அறியலாம் . பிசாசையும் அவனிடம் இருந்து நம்மிடம் வரும் எல்லாவற்றையும் நாம் எதிர்க்க வேண்டும் அப்போது அது நம்மை விட்டு போகும் .

இதை நினைவில் கொள்ளுங்கள் ....

யாக்கோபு 4 : 7
    பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்

Post a Comment

Previous Post Next Post