நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை



இன்றைய கிறிஸ்துவ இளைநர்களாகிய நாம் மிக குறுகிய சிந்தனையோடும், சுயநலத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய நோக்கமெல்லாம் நல்ல படிப்பு, நல்ல வேலை , நல்ல சம்பளம், அழகான வாழ்கை துணை, வீடு மற்றும் கார். இவையெல்லாம் இருந்தால் இதுவே பெரிய வாழ்கை என்று பெருமைபட்டுக்கொண்டிருக்கிறோம். இதிலே இயேசு, சில ஞாயிற்று கிழமைகளில் மட்டும் அல்லது கிறிஸ்துமஸ் நாட்களில் நம்வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். வாலிபனே இது பெயர் கிறிஸ்துவ வாழ்கை. இதற்காக தேவன் நம்மை அழைக்கவில்லை மாறாக அவருக்காக பெரிய காரியங்களை செய்ய நம்மை அழைத்திருக்கிறார்.

இதே வாலிப வயதில் .........

1. தாவீது தேவபெலத்தை கொண்டு கோலியாத்தை தன் நாட்டிற்காக கொன்றுகொண்டிருந்தான் .

2. யோசேப்பு தேவ ஞானத்தினால் எகிப்து ராஜாவுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்தான்.

3. தானியேலும் அவன் நண்பர்களும் தேவனுக்காக பலம் பொருந்திய ராஜாவையே எதிர்த்துக்கொண்டிருந்தனர் ..

ஆனால் நாமோ நம்மை பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.நாம் சுயநலமாக சிந்திப்பதை விட்டு, மற்றவர்களுக்காவும், தேவனுடைய சித்தம் என்ன என்பதையும் சிந்திப்போமானால், தேவன் நம்மை கொண்டும் பெரிய காரியங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார். வேத வசனம் சொல்வது போல ...

பிலிப்பியர் 2:4
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.

 இந்த வாலிப வயதில் தேவனை அதிகமாக தேடுங்கள்,  அவருடைய வரங்களை கேளுங்கள். அவர் கண்டிப்பாக நம்மையும் பயன்படுத்துவார். 

Post a Comment

Previous Post Next Post