நம்முடைய செய்கைகளின் நோக்கம் என்ன ?


நம்முடைய வார்த்தைகளை விட கிறிஸ்தவர் ஆகிய  நம்முடைய செயல்களையே மக்கள் அதிகம் கவனிகின்றனர். ஆனால் தேவன் நம்முடைய செய்கைகளின் நோக்கம் என்ன என்பதையே கவனிக்கிறார் .

வேத வசனம் இப்படி சொல்கிறது .....I சாமுவேல் 16:7

    மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்

ஆம் கர்த்தர் நம் இருதயத்தை பார்க்கிறார் , நம்முடைய நோக்கம் என்ன என்பதை பார்க்கிறார். நாம் பல காரியங்களை செய்கிறோம் உதாரணமாக ...பாடல் குழுவில் பாடுகிறோம், சபையில் இசை கருவிகளை வாசிக்கிறோம், முன்பாக சென்று காணிக்கை எடுக்கிறோம், பலருக்கு உதவி செய்கிறோம். இவைகளை எல்லாம் என்ன நோக்கதிற்காக செய்கிறோம் ? தேவனை மகிமை படுத்தவா அல்லது வேறு காரணதிர்க்காகவா ? நாம் சற்று சிந்திப்போம்.....

வேத வசனம் இப்படி சொல்கிறது .....கொலோசெயர் 3: 23, 24

    எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

ஆம் நாம் எதை செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே செய்ய வேண்டும் . நம்முடைய நோக்கம் அதுவாக தான் இருக்க வேண்டும்.

ஜெபம் : கர்த்தாவே நாங்கள் எல்லாவற்றையும் உமகென்று செய்ய கிருபை தாரும் . ஆமென் 

Post a Comment

Previous Post Next Post