உண்மையான பக்தி

பல வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படிக்கும் போது, என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு குறிபிட்ட மாணவன் இருந்தான். அவனை எல்லாரும் பக்திமான் என்று கூப்பிடுவர் காரணம்  அவனுடைய நடவடிக்கைகள் அப்படி இருக்கும். அவன் தன்னுடைய நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருப்பான்., வாரம் 4 அல்லது 5 கோவிலுக்கு செல்வான், வாரம் இரு முறை சாப்பிடாமல் விரதம் இருப்பான், குறிபிட்ட நாட்களில் அசைவம் உண்ணமாட்டான், வருடம் ஒரு முறை 15 நாட்கள் விரதம் இருந்து எதோ ஒரு மலை கோவிலுக்கு செல்வான். இப்படி அவனுடைய செய்கைகள் எல்லாம்  பக்தி மயமாக இருக்கும் . அதனால் அவனை பக்திமான் என்று கேலி செய்வார்கள் .

இதைபோல் கிறிஸ்தவர்களிலும் சிலர் இருகிறாகள், மற்றவர்கள் தன்னை பக்தி உள்ளவன் என்று எண்ணவேண்டும் என்பதற்காக பல செயல்கள் செய்வார்கள்.  எப்போதும் வெள்ளை உடை அணிந்து கொள்வார்கள், ஆலயத்தில் முன்பாக அமருவார்கள், சமயம் வாய்க்கும் போது  பலருக்கு அறிவுரை கூறுவார்கள், கைகளில் எப்போதும் பைபிள் வைத்திருப்பார்கள், அவர்களின் மொபைல் போன்களில் அழகான கிறிஸ்தவ பாடல்கள் பாடும்.

ஆனால் அவர்களுடைய செயல்கள் வேறு மாதிரி இருக்கும். இதைதான் இன்று நாம் பக்தி என்று நினைகிறோம். ஆனால் வேதம் சொல்கிறது .....


    திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

      யாக்கோபு 1 :27


நாம் சற்று சிந்திப்போம் ....மற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்   உதவுகிறோமா ?  மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கிறிஸ்துவின்  அன்பை பகிர்வோம்.

உலகத்தால் கறைபடாதபடி வாழ்கிறோமா? இயேசு சொன்னார்......


    இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. 

யோவான் 14:30


இப்படி நம்மால் சொல்ல முடியுமா ? நாம் இந்த உலகத்தில் எத்தனை காரியங்களில் சிக்கி தவிக்கிறோம் ??... உலகத்தால் கறைபடாதபடி வாழ ஆவியானவர் உதவி செய்ய ஜெபிப்போம். அதுவே உண்மையான பக்தி.




Post a Comment

Previous Post Next Post